Saturday, March 30, 2013

நாலும் தெரியாத நான்காவது பருவம்

மக்களே  ஒரு வருஷம் கழிச்சு இந்த பக்கத்த  திருப்பி எழுதுறேன் . காலேஜ் பாசம் திடிருன்னு வந்துடுச்சு . போன  வருஷம்  எழுதுனதுல சில  பேரு பீல் பண்ணாங்க . நண்பர்களே  இது பீல் பண்ற டைம் இல்ல , நினைச்சு  பாது சிரிக்க  வேண்டிய டைம். சோ என்சோய் !! நல்லா  இருப்போம் நல்லா  இருப்போம் , எல்லாரும் நல்லா  இருப்போம் 

அப்படியாக நான் காலேஜ் நாலாவது பருவத்துக்கு வந்துட்டேன் . ஹாஸ்டல் சாப்பாடு  இல்லாம நல்லா வெயிட் போட ஆரம்பிச்சுட்டேன் . ரூம்ல சாப்பிடுறதுக்கு கம்பெனி எப்பவுமே இருக்கும். நம்ம ராஜேஷ் ஆளு தான் நோஞ்சான் மாதிரி இருப்பானே தவிர பார்வதி ஹோட்டெல புல் மீல்ஸ் ரெண்டு அடிப்பான் , இவனாலே அந்த ஹோட்டல்ல மதிய சாப்பாடு விலை ஏத்திட்டாங்க. நம்ம ஷேக் அண்ணன்ன கேட்கவே வேண்டாம் , "எ ஒன்" ஹோட்டெல பத்து ஹால்ப் பாயில் சாபிடுவான் , கேட்டா போன முட்டை லைட்டா உடைஞ்சிருச்சுநு சாக்கு வேற சொல்லுவான். இவங்களோட போனா நாம சாபிட்றது கம்மி தாணு தோணும் . அதனால இவங்களோட போய் நல்ல சாப்பிடுவேன் . பட் ஆனா இந்து தோம்பு பயலோட போனா மட்டும் ஒரு சின்ன சிக்கல் . அவனுக்கு எங்க போனாலும் சாவனிர் வேணும்னு அந்த ஹோட்டெல இருக்கிற உப்பு பாட்டில் , சாஸ் டப்பா , மெளகு டப்பா எல்லாத்தையும் லுங்கில மடிச்சு எடுத்து வந்திடுவான் .வீட்ல ரெண்டு செல்ப் புல்லா இவன் ஆட்டைய போட்ட ஐட்டம் தான் இருக்கும். நம்ம ரமேஷ் ரொம்ப டீசெண்ட் . வீட்ல  சமைக்றேனு இருக்குற  எல்லா  பொருளையும் காலி பண்ணிடுவான் . சாப்பாடும்  படு சுமாரா தான் இருக்கும்  ( நம்ம  அதையும் ஒரு கட்டு கட்டுவோம்ல )

இந்த கோஷ்டியோட  சேர்ந்து ஒரு பீம் பாயா நானும் சந்தோஷமா  டெவெலொப்  ஆயிட்டுஇருந்தேன் . ஆனா என் உயிரை எடுக்குறதுக்கு ஒருத்தன்  இருந்தான். எங்க ரூம்க்கு கெஸ்ட்ன்னு  ஒருத்தன்  வருவான் . நானும் நண்பேன் டா,  பாசக்கார பயபுள்ள என்ன ஒட்டுனாலும்  விட்டுட்டு இருக்க மாட்டான்போலன்னு நினச்சேன் , ஆனா கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சுது கப்பி பய பக்கத்துக்கு வீட்டு ஆன்டிய கரெக்ட் பண்ண தான் எங்க வீட்டுக்கு வந்து இவ்ளோ இவ்ளோ கஷ்டபட்டான்னு.  பேசிகிட்டே இருப்பான் . நம்ம பசங்க அவனுக்கு  புகைச்சல்னு  பெயர் வச்சாங்க . அந்த கப்பி பண்ண கேப்மாரிதனத்த நம்ம கொஞ்சம் கழிச்சு பாக்கலாம். 

நம்ம கிளாஸ்ல நடந்த கொஞ்ச கூத்த  பாப்போம் . 4த் செமஸ்டர் ஒரு மொக்க செமஸ்டர். அதுக்கு ஏத்த மாதரியே ரெண்டு மொக்க  ஸ்டாப்ஸ் வந்தாங்க . முதல் ஆளு நம்ம குருமி. அவரோட உண்மையான பேரு மறந்து போய்டுச்சு . அவரு குருமினு  ஒரு ஆத்தரோட  புக்ல இருக்குற ஒவ்வொரு வார்த்தையும் படிச்சி படிச்சி காமிப்பான். சொந்தமா நம்மாளுக்கு யோசிக்க தெரியாது. கடுபடிச்ச கன்றாவியாவே சுத்துவான் .அதனாலே  அவன் எவனுயும் நம்ப மாட்டான்.  
இவன் பாடம் எடுக்கிறது  நம்ம ரோலர் சுப்பிரமணிக்கு  தாலாட்டு  பாடுற மாதிரி இருக்கும் . நைட் மூர்த்தி தெய்டர்ல பார்த்த  படத்த நினச்சே  தூங்கிடும் . நானும் ரவியும் அவன மாட்டிவிட  பிளான் பண்ணுவோம் . குருமிய உத்து  பாத்துகிட்டே  இருப்போம் . குருமி எங்கல  பாத்ததும் நாங்க ரெண்டு பெரும்  சுப்பிரமணிய பாக்க ஆரம்பிச்சிடுவோம். குருமி ஏன் நாங்க அவன பாக்கிறோம்னு  எட்டி  பாத்து காண்டுஆய்டுவான்.  சுப்பி  அன்னைக்கு   சப்பி  ஆயுடுவான். அப்பறோம் கொஞ்சம் நேரம் மொக்கைய போகும் .இப்படி  போன  போதுதான் ரவி ஒரு நாள் செம ஐடியா கொடுத்தான் . நம்ம ஏன் கவித எழுத குடாதுன்னு .நம்மளுக்கு பிகர  பாத்து தான் கவிதை எழுத கொடுத்து வைக்கலை , நம்ம  பீக்கடை பத்தி ஏன்  எழுத கூடாதுன்னு முடிவு பண்ணினோம் . அப்படி எழுதுன கொஞ்சம் கவிதை தான் இது " சுண்ணாம்பு  வாயா  ஏலுற  எஸ்தர பாத்தா  மோல்ர" ( ஏலுற -கேந்திரன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) ) . "கூட்டம்ணா கூடு எங்க ஐட்டம் ஜூடு". " கருப்பா இருக்கும் தார் ரோடு அத விட கருப்பு நம்ம கருவாடு " ( கருவாடு - சுரேஷ்  ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) )  இப்படி கிளாஸ்ல இருக்குற ஒருவருக்கும்  ஒரு பஞ்ச்  எழுதி வச்சோம் . ( கல்வெட்டில்  பொறிக்க  வேண்டிய சித்திரங்கள்  இவை . நாங்க  அதை தனியா  ஒரு புத்தக தொகுப்பு  வைரமுத்துவ  வச்சி வெளியிடுறேன்  )

சரி கடைசி மேட்டர் நம்ம குறுமிய ஓட விட்ட கதைய பாப்போம் . செமஸ்டர்  முடிஞ்சா நம்ம வாதிஸ் எல்லாம்  நம்ம மேல கொஞ்சம் பாசமா இருப்பாங்க . ரீசன் என்னனா அது பீட் பாக் (feedback )  டைம் . நம்ம குருமி எங்கள எல்லாம் கொடும படுத்தினதுக்கு பலி வாங்குற டைம் . இந்த ஷேய்க் பய  நம்ம மாமா  எல்லோரும் அவன  ஜென்ம விரோதியா பாத்தாங்க . பீட் பாக்  பக்கத்துல .. 1 எச்செல்லேன்ட்  2.வெரி குட்  3. குட்  4 ஓகே   அப்டின்னு  இருக்கும் . நம்ம பய புள்ளைங்க 5 பூர் ....10 வெரி பூவர் ......20 வெரி வெரி  பூவர் .....25 வெரி வெரி வெரி வெரி பூவர்  அப்டின்னு எழுதி  கொடுதுடானுங்க  . குருமிக்கு  உறுமி  அடிச்சிடானுங்க . 

என்னும் சில  விஷயங்கள் நாலாம் பருவத்துல நடந்துருக்கலாம் . காலம் வேகமா  ஓடுறதுல  பாதி விஷயம் மறந்துடுது . அதுக்காகதான் இந்த.  மாதிரி  எதயாவது கிறுக்கி  வைக்கலாமானு  முடிவு பண்ணினேன் . மக்களே நீங்களும் ஏதாவது  கிறுக்கி வைங்க . வி நெவெர் க்நொவ் . நாளைக்கு  உங்க பேரன் என்னத்த  கிளிச்சனு கேட்டான , வி நீட் ஹிஸ்டரி . வரலாறு மிக முக்கியம் மக்களே !!



Saturday, March 31, 2012

மானம் கெட்ட மானிடர்களுடன் மூன்றாம் பருவம்


வந்தாச்சு வந்தாச்சு நாங்க பாலை வனத்துக்குள்ள  வந்தாச்சு,   தாவணி கனவுல  கூட இனி  வராது ( வந்துட்டாலும் ..)  திரும்புற இடம் எல்லாம் மொக்க பசங்களும் பக்கி பெருசுகளும் ( வாத்தியார் ) தான் . அடுத்த மூன்று ஆண்டுகள் இந்த ஜெயில் தான் என நினைத்து நினைத்து விம்மினேன். வெளில தான் மெகானிகல் னா மாஸ் னு படம் போடுவோம் அனால் உண்மையா பெரு மூச்சி தான் விடுவோம். இந்த மூன்றாம் பருவத்துல இருக்குற பிரட்சன போதாதுன்னு புதுசா சில பிரச்சனைகள் வந்து சேந்துசுங்க. அவங்களுக்கும் கழுத ஒரு அறிமுக விழா எடுத்து தொலைவோம்.

முதல்ல அறிமுக படுத்தறது சபை தலைவர். தாத்தா வயசு இருந்தும் அவர நாங்க மாமானு செல்லமா கூப்பிடுவோம். மனுஷன் எத பத்தியும் கவலை பட மாட்டாரு . பால்டேக்க்னிக் எப்படியோ காசு கொடுத்து டிகிரி வாங்கிட்டு இப்போ பெரிய படிப்பு படிக்கணும் என்று ஒரு ஆர்வதுள்ள வந்துட்டாரே தவிர பாடம்னு வந்துட்டா பத்து அடி தூரம் தள்ளி தான் நிப்பாரு. இவரோடு கணினி அறிவ பத்தி நான் சொல்லியே ஆகணும் . கடைசி பருவத்தின் இறுதியில் அவர்கிட்ட ஒரு பாரத்தில்  அவருடைய ஈமேல் அட்ரஸ் எழுதி கேட்டோம் , அவர் அதற்க்கு " விடு மக்கா இப்போ நா அதெல்லாம் செக் பண்றது இல்ல" னு சொன்னாரு. நாங்க விடாபிடியாய் இல்ல மாமா இப்போ இல்லனாலும் பின்னாடி தேவை படும் சொல்லுங்க என்று சொன்னோம் , அவரு ஸ்டார்வின் ஜியோ  னு  போட்டுக்கோ மக்கா னாரு . நாங்க உடனே புல் அட்ரஸ் சொல்லு மங்கு மாமா என கேட்டோம். உடனே அவரு " டபிள்யு டபிள்யு டபிள்யு டாட்  ஸ்டார்வின்ஜியோ டாட்  காம்  என்று சொன்னார் . நம்ம பில் கேட்ஸ் கூட இப்படி ஒரு மெயில் அட்ரஸ் வச்சதில்ல . நான்கு வருடம் இவரு எப்படி படித்திருகார்னு அப்போ பாத்துகோங்க .
நம்ம மாமா சும்மா இருந்தாலும் அவரு கூட இருக்குறவன் சும்மாவே இருக்க மாட்டான் . பேரு சக்கரை வாசன் , மாமா ஓட ரைட் ஹன்ட்,  லெப்ட் ஹன்ட் எல்லா  ஹன்டும் சார் தான் . சார் கிட்ட ஏதாவது பேசுனா பத்து ஊருக்கு பஞ்சாயத்து தலைவர் மாதிரி பேசுவார் . ஆனா செலவு செயுற பத்து ரூபாய் கூட மாமா பாக்கெட்ல இருந்து தான் எடுப்பார் .


இவன கூட மன்னித்து விட்டுடலாம் என்னும் சில கேரக்டர் வந்து சேந்தாங்க பாருங்க , புள்ளி னு ஒருத்தன் வந்தான் தரித்திரம் புடிச்சவன் . மெக்கானிகல் மானத்தையே வாங்கிட்டான் . காலேஜ் ல ஒரு பொன்னையும் விடல . தொரத்தி தொரத்தி கடலை போட்டான். என்ன தான் மானம் கெட்டு திட்டு வாங்கினாலும் கண்டுக்காத ஜென்மம் . சொரனையே இல்லாம " ஹலோ என்ன நேத்து காறி துப்பினது நீங்க தான , இன்னைக்கும்  துப்புவீங்களா" னு இத கூட சாக்கா வச்சி கடலை போடுவான் . எதையும் தானா ஆட்ட முடியாது . அத மாதிரி இவன் ஆடுறதுக்கு காரணம் ஒருத்தன் இருந்தான் . அந்தோணி மாக்கான், நான் அவன மாக்கான் சொன்னாலும் உண்மையில் அவன் தான் ஊர்ல இருக்கிறவங்க எல்லாத்தையும் மாக்கான் ஆக்கிட்டு அவன் குஜாலா இருப்பான். அவன்கிட்ட எங்க குத்து விளக்கு பட்ட பாட்டை சொலனும்னா அதுக்கு நாலு எபிசொட் தனியா எழுதணும் . புள்ளி கிருஷ்ணாவ  லூசா அலையவிட்டது இவன்னா , அவன குழிதோண்டி மண்ணுல புதச்சவன் ஒருத்தன் இருக்கான்,


 தினமும் ஒரு நூற்று முப்பது கிலோ தூக்குவான் . அட அவன் வெயிட்ங்க அது . கண்ணு எங்கயாவது வளைவு தெரியாதானு துரு துருனு பார்த்துகிட்டே இருக்கும்  , காது கிசு கிசு கேட்கரதற்கு மட்டும் வச்சிருப்பான் . எவனாது ஒருத்தன்  நல்ல இருந்தான பொறுக்காது  வயிறு எறிஞ்சிடும் ,வாய திறந்தா அடுத்தவன் டர்ரு தான் , இவன ஒரு நடமாடும் பீடையாவே எல்லோரும் பார்த்தாங்க . பண்ணி தம்புனு எல்லோரும் கூப்பிடுவாங்க . அது என்னமோ "பண்ணினா" இங்கிலாந்துல கொடுக்கிற 'சர்' பட்டம் மாதிரி இவனுக்கு ஒரு பெருமை . இவனோட  முக்கியமான கரக்டேர் என்னன்னா ,  அவன் காலேஜ்ல படிக்கிற எந்த பொன்னையும் பாக்கமாட்டான்.  அதுக்காக அவன யோக்கியன் மட்டும் நினச்சிடாதீங்க . பக்கிக்கு ஆண்டியோபோபியா . " மச்சி ஈஸ்ட் ஓர் வெஸ்ட் ஆன்டி இஸ் தி பெஸ்ட் " அப்டின்னு கேவலமா , கூட்டி சுத்தம் செய்றவங்க , ஆயா , சில சமயம் பாட்டி இப்படி பட்டவங்கள மட்டும் தான் மனதார பார்பான் . இவன் நம்பினு ஒரு அம்பி பயல கேர்ள் பிரிண்டா மாதிரி வேற வச்சிருந்தான் . கலி முத்திடுச்சுனு இவன பாத்தா சொல்லலாம்.
இந்த கருவாயன் கருவினால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம்  பார்க்கலாம். கருவாயன் தம்புக்கு சுட்டு போட்டாலும் பாடம் ஏறாது. அவன் வாழ்க்கை சி பீ எஸ் ஈ வில் தொடங்கி மெட்ரிக் பார்த்து..  ஸ்டேட் போர்டில் படி ஏறி, பால் டெக்னிக்கையும்  கடந்த வாழ்கை . அவன் டிகிரி வாங்கினால் ஊரில் விழா எடுத்து கொண்டாட காத்து கிடந்தனர் . அவ்ளோ அறிவு . இவனுக்கு காலேஜ் மேன்டோர்  ஒருத்தர் இருந்தார். அவர் அவனை கூபிட்டு நீ ஏன்பா இவ்ளோ தத்தியா இருக்க , இந்த பாலாஜி , சீனி , கிருஷ்ணா ஓடெல்லாம்  சகவாசம் வச்சிக்காத. கே எஸ் , ரவி போல உள்ள படிக்கிற பசங்களோட மட்டும் சேந்து படி , கொஞ்சமாவது உருப்படுவ என சொனார் . நல்லவனா இருந்தா இவன் அப்படி செஞ்சுருப்பன் . நாசமபோனவன் தான இவன் , என்ன செஞ்சான் தெரியுமா ,தினமும் ஒரு நூறு தடவ " இறைவா நான் இந்த செமஸ்டர்ல ஒரு எக்ஸாம் கூட  பாஸ் ஆகலனாலும் பரவாஇல்ல , ரவிய மட்டும் ஒரு எக்ஸாம்லயாவது பெயில் ஆக்கிடு அப்போ தான் என் மனசுக்கு நிம்மதி என்றான் ". அசிங்க புடிச்சவன் நினச்ச மாதிரியே ரவி அந்த பரிட்சைல பெயில்ஆக பண்ணி குட்டி தம்பு அதுல பாஸ் ஆய்ட்டான்!!  அவ்ளோ கிரகம் பிடிச்ச சகுனி அது.


கடைசியா ஒருத்தனா பத்தி மட்டும் சொல்லிடுறேன் இல்லேனா " இவன்  லேட்ரல் என்ட்ரி னா பார்சியாளிட்டி பாக்றான் டா " னு ஒரு தேசிய பிரச்சனைய கொண்டு வந்துடுவான், அதனால அந்த தறுதலை பற்றியும்  கொஞ்சம் பாக்கலாம் .  " நாலு பேருக்கு நம்மளால கெட்டது நடக்துன்னா எதுவும் தப்பில்ல " என்ற ஒரு உரிய கொள்கை  வச்சிகிட்டு நம்ம உயிரை எடுத்திட்டு இருந்தான் .மனசுல கமல்ஹாசன்னு நினைப்பு வேறு . எங்க குத்து விளக்கு கூட அவர தான் பாக்குதுன்னு பிரம்மை வேறு .புகைச்சல் , செத்த நாயே , மங்கு  என்ற சொற்களுக்கு சொந்தக்காரன் . கொடீஸ்வரனாய் இருந்த கஞ்ச பயல் .தம்பு மேல அளவு கடந்த பாசம் வேற வச்சிருந்தான் . அவனுக்கு எதாவது ஒரு கேடு வந்திருச்சுனா எங்களுக்குலாம் ட்ரீட் கொடுத்து துக்கம் அனுசரிப்பான். அம்புட்டு நல்லவன்.
நான் அந்த வருடம் விடுதியில் இருந்து வெளியேறி தனியாக வீடு எடுத்தோம் . ராஜேஷ் , தம்பு , ரமேஷ் எனக்கு அபீசியல் ரூம் மேட் ஆனார்கள் . பாலாஜி அன்அபீசியல்  ரூம்மேட்ஆக எங்கள் ரூமில் தஞ்சம் புகுந்தான் . இந்த நல்லவன் எப்படி கடலை போடுவான்னு  ஒரு சின்ன விஷயத்த வச்சி பாக்கலாம். ரூம்ல எப்பவுமே வந்து யாரோடாவது போன்ல  கடலை போட்டுடே இருப்பன். இப்படி ஒரு நாள் பயங்கர சந்தோஷமா சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருந்தான். இந்த பக்கிய எந்த லூசு பேசுதுனு  எனக்கு ஒரு பொறாமை . அவன் பேசிட்டு இருக்கும் போதே போன வாங்கி காதில் வச்சேன் " மயிறு , மூடு , வாய கிளிச்சுடுவேன் " என்று ஏக வசனத்தில் ஒருத்தி கத்தி கொண்டிருந்தாள். ஆம்புல குரலோட கலந்த பொம்பள குரல் அது . பேசிய விதத்தில் இருந்து அவள் எவ்வளவு சூடாக  இருக்கிறாள் என புரிந்தது . இவனோ பயங்கர கூலா " மச்சி ஏன் ஆளு என்ன சொல்றா , செம ஹாட்ல" என சொன்னான். எனக்கு தெரிஞ்ச எல்ல கெட்ட வார்த்தைகளையும்  சேர்த்து வச்சி அவன திட்டினேன் அவனோ " மச்சி உனக்கு என்னும் அவ அளவுக்கு திட்ட தெரியல , ப்ராக்டிஸ் பத்தல " என்றான் மனம் கெட்ட பயட்ட பேசுனா நமக்கு தான் கேவலம்னு வெளியே ஓடி  வந்துட்டேன் . இவ்ளோ அவமானத்தையும் தாங்கி கொண்டு கடலை கண்டிப்பா போடுனுமா?


இந்த கலுசடைகள்லாம் இந்த பருவத்துல வந்ததால , இத தவிர எனக்கு பெருசா வேற ஒன்னும் நியாபகம் இல்ல . இருண்டு வாரம் லீவ் போட்டு யோசிச்சும் பயன் இல்ல. அதனால இந்த வார கட்டுரைய இதுக்கு மேல எழுத முடியாம இதோட நிறுத்துகிறேன் . மற்றவை அடுத்த வாரம் பாக்கலாம்.


Saturday, March 17, 2012

தறிகெட்டு திரிந்த இரண்டாம் பருவம்



புதிய மனிதர்கள் புரியாத பிதர்கள் குளிர்ந்த நெஞ்சங்கள் குனியாத பண்ணிகுட்டிகள்  என்று முட்ட போண்டாய்  கூட்டத்துடன் கீர வடையாய் மெக்கானிகல் கூட்டத்தில்  ஐக்கியம் ஆனேன். சஹாரா பாலை வனத்தை விட அப்படியோர் வறட்சி இந்த கூட்டம் . அப்படி இருக்க சாக்கடையில் கலக்கும் கழிவு நீராய்  , எருமை கூட்டத்தில் இருக்கும் கழுதையாய் எங்கள் கூட்டத்திலும்  குத்துவிளக்கு ஒன்று வந்து  சேர்ந்தது . பட்சி ஆறு மாதத்துக்கு முன்னவே களவாடபட்டும் அது தெரியமால் அவளை சுற்றி  ஒரு குள்ள நரி கூட்டம் எப்போதும் வட்டம் இட்டு கொண்டேயிருந்தது  . ரைடர் குரூப் என பெயர் பெற்ற  அந்த கும்பலின் தலைவன் அடங்காபிடாரி  அன்பு , அவளை யாரவது  பார்க்கும் போது அவளை விட அதிகமாக வேதனை படும் அஜக்கு , எங்கள் கல்லூரியின் குள்ள தனுஷ் அலெக்சாண்டர் மற்றும் புத்திசாலி முட்டாள் ரெங்கா . இவர்கள் எல்லாம் முன் வரிசையில் இருந்து அவளை காப்பற்றி கடமை ஆற்றிகொண்டிருந்தார்கள் . பின் வரிசையில் ரவி , செத்த ஸ்வர்ணா , நான் , மற்றும் ரோல்லர் இருந்தோம். எங்களோடு என்னொரு  ஒரு கூட்டம் ஒட்டிகொண்டது . என் பள்ளி நண்பன் கருவாடு ரமேஷ்ம் அவனோடு எங்கள் வகுப்பின் நான்கு ஆண்டுக்கு பிடித்த சனியன்  ஷெய்கும்  வந்து சேர்ந்தான். பார்த்தால் பக்ரித்துக்கு வளர்க்கும் ஆடு மாதிரி அமைதியாக இருந்தாலும் நான்கு வருடங்களில்  அவன் செய்த குற்றங்களை கணக்கு எடுத்தால் நமக்கு மயக்கம் வந்து விடும் . சி எஸ் ஈ , ஈ சி ஈ  ல லாம்  அறுபது தறுதலைகள்  இருந்தும்  சந்தோஷமா இருந்தாங்க. எங்க கிளாஸ்ல இவன் ஒருத்தன வச்சிகிட்டு  நாங்க பட்ட அவஸ்த இருக்கே அய்ய யை  யாய் யோவ்.சனி இவன் உடம்போடு ஒட்டிக்கொண்டு ஆட்டம் போட்டது. இவனால் எங்கள் வகுப்பிற்கு வந்த கேடு காலத்தை சிறிது மட்டும் சொல்கிறேன் நீங்களே புரிந்து கொள்வீர்கள் .  இரண்டாம் பருவ வகுப்பில்  சி மொழி ( சி லாங்க்வேஜ் ) ,  கணினி தாளின்  ஒரு பாடமாக இருந்தது. அதை எடுத்தது முண்டகன்ஈஸ்வரி கசந்தா கள்ளினாயகம். பார்த்தாலே கேவலமாய் இருப்பாள். இதில் அவள் முண்டகண்ணை சுழட்டினாள் என்றால் வாந்தியே வந்து விடும். அவள் ஒரு நாள் வழக்கம் போல பயங்கர கொடுரமாக பாடம் நடத்தி கொண்டிருந்தாள். கடமையே கண்ணாய் நாங்கள் கதை பேசி கொண்டிருக்க , பேக்கு மட்டும் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தான். என்னடா இவ்ளோ நேரம் ஆகியும் பிரட்சன ஒன்னுமே காணுமேனு நாங்க யோசித்திருக்கையில்,  முண்டகன்ஈஸ்வரி  கேட்டால் ஒரு கேவலமான கேள்வி. மானிடருக்கும் சி பீ யூக்கும் வித்தியாசம் தெரியாத எங்களிடம்   "டூ எனி ஒன் க்நொவ் ஜாவா "-  உன் கிளாஸ்ல இருந்தா சாவுரது எப்படினா  தெரியும்  செத்தாலும் எங்களுக்கு ஜாவா தெரியாது என்று நான் முனுமுனுகையில் " ஐ  நோ ஜாவா மேடம் " என்றான் பேக்கு . பொட்ட கழுதய கூட கா மணி நேரம் மொரட்சி பாக்குற இந்த கப்பி பயலுக்கு  இவ்ளோ அறிவா என்று நாங்கள் வியந்து பார்க்கையில் , சற்றும் சலிக்காதவனாய்  " யு மீன் ஜாவா பைக் மேடம்,  ஐ ஹவ் சீன் தெம் இன் மூவீஸ் மேடம் . நய்ஸ் பைக் மேடம் ஐ  லைக் இட் வெரி மச் " என்று போட்டான் பாருங்க ஒரு மொக்கைய . அவ்ளோதான் வகுப்பு முழவதும் குபீர் என்று சிரித்தது. சாதாரண மொக்கை தான் , ஆனாலும் நாங்கள் இந்த மாறி நேரத்தில் நாங்கள் எங்களுக்குள் பேசிகொண்ட மொக்கைக்கும் சேர்த்து வைத்து சிரித்து விடுவோம் . இடி முழங்கும் படியாய் நாங்கள் சிரித்ததை பார்த்ததில் கடுப்பானது முண்டகன்ஈஸ் . " ஐ அப்ப்ரிசியட்  யுவர் சென்ஸ் ஒப் ஹுமர் . பட் நாட் இன் மி கிளாஸ் . சிச்டி பை ச்டுடேன்ட்சையும் லைன் ல நிப்பாட்டி ஒரே புல்லேட்ல சுட்டுபுடுவேன். மைன்ட் இட்  " என கடுப்படித்தது. நாங்க எல்லாம் அந்த மூஞ்சை பாக்காமல் மறு பக்கம் திரும்பி இருக்க  இந்த கப்பி மட்டும் . தேங்க்ஸ் மேடம் என சொல்லி அவளுக்கு சூடு ஏத்தினான்.  புல்லெட் ராணி அன்றில் இருந்து எங்களிடம் எதாவது தெரியுமா என்று கேட்டதே இல்லை.

வகுப்பில்தான்  நண்பர்கள் இப்படி இருக்கிறார்கள் என்றால்  விடுதியில் அதை விட கொடுமையாய் இருந்தனர். ஒவ்வொரு அறையிலும் விசித்திர மனிதர்கள் இருந்தனர்.  அறை என் நான்கில் மூன்று  மூதாரிகள்  இருந்தனர்  மேலே நாம் பார்த்த ஷேய்க் , குசும்பாண்டி , பாவாடை அமித். இவர்களோடு நம் நெய் கூவும் சேர்ந்து கொள்வான். அந்த அறையில் எதாவது ஒரு போட்டி வைத்து கொண்டே இருப்பார்கள் . அன்றும் ஏதோ ஒரு கேவலமான போட்டி நடத்தி கொண்டிருந்தார்கள் . நமக்கு விசேஷ அழைப்பு வரவே உள்ளே சென்று எட்டி பார்த்தேன் . உள்ளுக்குள் செம துர்நாற்றம் வீசிகொண்டிருந்தது .எல்லோரும் பரபரப்பாய் காணப்பட்டனர். அன்று தான் இறுதி போட்டியாம். பாவாடை அமித்தும் நெய் கூவும் விளையாடிகொண்டிருந்தர்கள். குசும்பாண்டி நடுநிலையாளர் வேலை பார்த்துகொண்டிருந்தார். மச்சி இதுக்கு நீ நான்கு கொடுக்கலாம் , மச்சி இதுக்கு நீ சிக்ஸ் கொடுக்கணும்னு மாத்தி மாத்தி ஏதோ செய்துகொண்டே நெயும் பாவாடையும் சொன்னார்கள்.  ஷேய்க் மச்சி என்னும் ரெண்டு தான் ஹண்ட்ரட் போட்ரலாம் என்று கூவிகொண்டிருந்தான் ( என்கரேஜ் )  .  "டேய் என்னடா நடக்கது இங்க  எனக்கு ஒன்றும் புரியல ,  நாத்தம் மட்டும் ஏறி கொண்டே இருக்குது" என்று கேட்டேன். மச்சி ஒலிம்பிக்  கேம் விளையாடறோம்டா. யாரு அதிக வாயு வெளியேற்றுகிறார்கள் கேம் டா இது . என்னால நாற்பது தான் முடிஞ்சது பசங்க பின்னுறாங்க , பாவாடை செஞ்சுரி போடபோறான் ,  முடிஞ்சா நீயும் ரெண்டு போட்டிட்டு போ என்றான். எனக்கு வாந்தியே  வந்திடும் போல இருந்தது. கருமாந்திரம் பிடிச்சவங்க இந்த வாந்திய வச்சி  இதுக்கும் ஒரு விளையாட்டு ஆரம்பிச்சிடுவாங்கனு ஓட்டம் பிடித்தேன் . சத்தியமா இவங்கெல்லாம் உருபடவே மாட்டாங்க , உருப்படவே மாட்டாங்க என்று கோவத்தில் திட்டிகொண்டே சென்றேன்.

நாம் வகுப்பிற்கு மீண்டும் செல்வோம்.  ஒரு செம கதாபாத்திரத்தை அறிமுக படுத்துகிறேன். இந்த  தோழரை பாத்தா தமிழ் படத்தில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி பலமாய் இருப்பான். ஆனா அவன் பேசினான் என்றால்  கூவ ஆத்துல ஒன்னுக்கு போறவன் மாதிரி பேசுவான் . அவன் பேரே எனக்கு மறந்துபோச்சு . நண்பன் ரமேஷ் அவனுக்கு ஒன்னே முக்கானு பெயர் வச்சான்.  இந்த ரமேஷ் பய அவன வச்சி ஒரு லொள்ளு சபாவே நடத்தி வந்தான். அவ்ளோ அழகா அந்த பய்யன்  இருந்தும் அவனை ஒரு அஜக்கு போல ரமேஷ் மாற்றிவைத்திருந்தான். அவனுக்கு நேரம் போக வில்லை என்றால் அவ்ளோ தான் , ஒன்னே முக்காவை சீண்டி விடுவான்.  இப்படி அவனை உசுபேத்தி அவனை நம் மேனகை  ( எப் செக்சன் ) மேல் காதல் வரசெய்தான் .  அவள் ஏற்கனவே சப்பாத்தி மாவுக்கு சால்நாவாக இருப்பது தெரிந்தும் நம் காதல் ரோமியோ அவள் பின்னால் சென்று படம் போடுவான். அவனை அவள் சீண்ட கூட மாட்டாள். ரமேஷ் விடாபிடியாக அவனை மச்சி உனக்கு ஹிந்தி தெரியும்ல , நீ போய் ஹிந்தில கடலை போடு அவ கவுந்திடுவா  என ஏற்றிவிட்டான்.  அவனும் அவள் வகுப்பு முன்னால் ஒரு நாள் சென்று அவள் அருகில் வந்தவுடன் " ஏக் மினிட்  போல்காஜி  ( பெயர் மாற்றப்டுள்ளது ) "  என்று விம்மி விம்மி கூபிட்டான் . உலகத்தில் இருக்கும் அருவருப்பான ஒரு விஷயத்தை அவள் அப்போது பார்த்தமாதிரி அவனை பார்த்து விட்டு  எதிர்ப்புறமாக  திரும்பி சென்றாள் . அந்த கண்கொள்ளா காட்சியை  நேரில் பார்த்த ரமேஷ் பேரானந்தம் அடைந்தான். பரவச நிலையை அடைந்தான் என கூறலாம். அவன் முன்னாடி வந்து கூத்தாடினான் , கொண்டாடினான் . ஊர் முழுக்க தம்பட்டம் அடித்தான்  "ஏக் மினிட்  போல்காஜி ...உன்னை யாரோ ஒ**ஆ  ஜி "  என்று  அவனை  கிண்டல் செய்து தலை குனிய செய்தான். அன்று குனிந்தவன்  அவனால் மீண்டும் தூக்கவே முடியவில்லை - தலையை .

கடைசியாக ஒரு முறை நாம் விடுதிக்கு செல்வோம். இம்முறை நாம் இருபத்தி எட்டாம் அறைக்கு செல்லலாம். அந்த அறையில் நாம் முன்னே பார்த்த சர்தார்ஜி இருந்தார் . கூட இருந்தவர்  ஆர் எள் எஸ்  ( மூன்றாவது ஒரு அப்பாவி அவரை பின்பு பார்க்கலாம் ). அந்த அறையில் எப்பொழுதும்  அவர்கள் இருவரும்  சண்டையிட்டு கொண்டே  இருப்பார்கள். அன்று நான் போகும் போதும்  வழக்கம் போல் சண்டை போட்டு கொண்டிருந்தனர் . நமக்கு ஊர் வம்பு என்றால் நன்றாக பிடிக்கும் என்பதால் , இன்று நன்றாக ஏத்தி விட்டு ஒரு கலவரம் உண்டு பண்ணி இரத்தம் பாத்து விடலாம் என ஆர்வம் கூடிவிட்டது.  அன்றைய சண்டையின் காரணம் யாரால் அறை ஒழுங்காக  இல்லை .  சர்தார்ஜி,  எள் எஸ்இடம் உன் நண்பர்கள் வந்து தான் அறையை நாசம் செய்கிறார்கள் என்றான். பதிலுக்கு இவன் உன் நண்பர்குளுக்கு தான் ஒரு எழவும் தெரியாது நீ தான் கரணம் என கூறினான் . இவ்வாறு விவகாரம் சூடுபிடிக்க , யாரவது யாரையாவது அடிக்க மாட்டாங்களா  என ஆவலாய் பாத்திருக்க , சட்டேன்று அவர்கள் பார்வையில் நான் சிக்கினேன். எள் எஸ் என்னிடம் மச்சி நீ இப்போ யாரடா பாக்க வந்திருக்குற என்றான். நான் மச்சி உங்க ரெண்டு பேரையும் தாண்டா என்றேன். அவனோ விடாது  யாரவது ஒருத்தர சொல்லு மச்சி என்று அலறினான். சரி என்று நான் என் உயிர் தோழன் முக்கா ஜி யாய்  பார்க்க வந்திருக்றேன் என்றேன். நம்ம முக்கா ஜி  பசங்களுடன் பேசுவதில் தனி விருப்பம் காட்டமாட்டான் என்ற ஊரறிந்த விஷயத்தை நான் சற்று மறந்தே போனேன். இல்ல மச்சி  நம்ம முக்கியமான விஷயம்னா சாயந்தரம் பேசலாம். சாதாரன விஷயம்னா  நாளைக்கு பேசலாம்னு சொன்னான். அட கடன்காரா இவனெல்லாம் கல்லூரியிலே  காதல் பண்ணி அதே பொண்ண கல்யாணம் பண்ணி  ஜென்ம சித்ரவதை அனுபவிக்கணும்னு சாபம் விட்டுட்டு எள் எஸ் இடம் மச்சி சரி  உன்ன தான் பாக்க வந்தேன்னு சொன்னேன். உடனே மாப்ளை  இனி என்ன பாக்கணும்னா குளிச்சிட்டு , கால் எல்லாம் கழுவிட்டு சாயந்தரம் ஏழு டு எட்டு வா . அந்த டைம்ல நாம பேசலாம் என்றான். நான்  கோவிலுக்கு போனாலே  குளிக்கணுமானு யோசிப்பேன், இந்த பன்னாடைகள பார்கறதுக்கு நான் குளிச்சிட்டு வேற போகுனுமானு கோபமுற்று அதே சாபத்தை  அவனக்கும் கொடுத்திட்டு இடத்தை  காலிசெய்தேன்  ( என் சாபம் பலித்து அவர்கள் இருவரும் இப்போது ஜென்ம தண்டனை அடைந்திருகார்கள் என்பது ஒரு  மகிழ்சிகரமான செய்தி )  

கல்லூரி வாழ்கையின் சிறப்பான விஷயம் சுற்றுல்லா. அதுவும் மெக்கானிக்கல் சுற்றுல்லா என்றால் ஒரு தனித்துவம் இருக்கும். பெண்கள் இல்லாததால் எங்கே வேண்டும் என்றாலும் தங்கி கொள்ளலாம் எவ்வளவு நேரம் ஆனாலும் ஊர் சுத்தலாம் . அனால் பீக்காளி வாத்தியார்மார்கள் அதற்கு ஆப்பு அடித்தனர். மற்ற வகுப்பு எல்லாம் சுற்றுலா கெளம்ப , எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.  கடலை மட்டுமே வாழ்கைன்னு நினைக்கிற  சி எஸ் ஈ  பசங்க  கூட சுற்றுலா செல்ல கெளம்பி விட்டார்கள். சி எஸ் ஈ  நண்பன் செந்தில் என்னமோ சந்திரா மண்டலத்துக்கு  போகிற மாதிரி படம் ஓட்டினான் ( அவனுக்கு அவன் ஆளுடன் செல்வதால் அப்படியொரு சந்தோஷமாக கூட இருக்கலாம் ). என்ன செய்யலாம் என்று யோசித்த போது நம்ம ஷேய்க் வாழ்கையின் முதல் முறையாக ஒரு நல்ல யோசனை சொன்னான். நாம ஏன் மச்சி தனியா பிளான் பண்ணி போககூடாது என்று. சட்டேன்று தீர்மானித்து டக்கென்று முடிவெடுத்தோம். எங்கள் துறையில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நம் ஷேய்க் எப்படி ஊர் வம்பில் சிறந்தவர் என்பதால் இந்த வம்பை வாங்க அவர் ஐடியா கொடுத்தார் . அடுத்ததாக வண்டியை பற்றி வாய் கிழிய பேசும் ஸ்வர்ணாக்கு  வண்டி பதிவு செய்யும் பொறுப்பு ஒப்படைக்க பட்டது. ரவி திட்டத்தை பிரபலபடுத்தி ஆள் சேர்த்தான்.  சுற்றுலாவில் உல்லாசமாய் இருக்க ஒன்னே முக்காவை சேர்த்தோம்.  அடி தடிக்கு சாம் , வீட்டு சாப்பாடுக்கு டாடி ரமேஸ் . ஒட்டு வாங்குவதற்கு லிவியும் , கழுதையும் தானே வந்து சேர்ந்தனர். எல்லாம் இருந்தும் எங்கே செல்லலாம் என்று விஷயத்தை மறந்து விட்டோம். அப்பொழுது நண்பன் ரமேஸ் நம் செந்திலிடம் லாகுவாக பேசி ,  சி எஸ் ஈ போகும்  திட்டபடத்தை ( ப்ளான் ) ஆட்டை போட்டு எடுத்து வந்தான். எங்கள் வண்டி  திட்டபடி சி எஸ் செல்லும் எல்லா இடத்திற்கும் பத்து நிமிடம் முன்னரே சென்று , டேய் மச்சி என்னடா இங்கயும் வந்துடீங்க ,  ஏண்டா எங்கள் பின்னாடியே  வரீங்க , உங்க பொண்ணுங்க எங்களோட தான் வரணும்னு சொல்றாங்களா  என்று கேட்டு உசுப்புஏத்தினோம்  . பொண்ணுங்களை விட பசங்க எல்லோரும் கடுப்பாய் பாத்தது எங்களுக்கு ஒரு வித பெருமை உண்டாய்ற்று. வந்த இடத்தில் பிரச்சனை பண்ணாமல் போனால் நல்லா இருக்காது என்பதால் எதாவது பிரச்சனை வராத என்று தேடி கொண்டே சென்றோம் . நல்ல வேலையாக அங்கு சி எஸ் பசங்களை கூட்டிவந்த வாத்தியார்கள் குளித்து கொண்டிருந்தார்கள். நாங்கள் எல்லாம் உடனே குஷி அடைந்து அவர்கள் முன்னர் ஆட்டம் போட்டோம் அந்த ஒன்றை கண் வாத்தியானை வசை பாடினோம் , குட்டத்தில் தள்ளுவதை போல அவனை தள்ளி விட்டு பூரிப்பு அடைந்தோம். அந்த இரண்டு நாள் சுற்றுல்லா எங்களை ஒரு ரவ்டியாக மாற்ற கத்து கொடுத்தது.
சுற்றுலா முடிந்து வந்தவுடன் எங்கள் வாழ்கையின் முதல் வினவல் ( இன்குரி ) கூடத்திற்கு அழைப்பு வந்தது. நண்பன் பேக்கு அப்போ கூட மச்சி பிரட்சன பண்ணா பாதி ரௌடி பிரட்சன பண்ணி மாட்னா தான் முழு ரௌடி, போட்டுக்கோ மச்சி என கை தூக்கினான்.  எந்த கோவிலில் நான் செய்த புண்ணியமோ அன்று எங்களை எச்சரிக்கை மட்டும் செய்த அனுப்பினர். அனால் அன்றில் இருந்தே உலகம் எங்களை உற்று பார்க்க ஆரம்பித்தது. இரண்டாம் பருவம் முடிந்ததும் எங்களை மெக்கானிகல் கட்டடித்திற்கு அனுப்பிவிட்டனர். எங்களை பற்றி சிறு குறிப்புகளும் அதில் இருந்தது. மிச்செவியௌஸ்  பட்டியல்  என்று ஒன்று  அமைத்து அதில் எனது பெயர் முதலில் இருந்தது . என் நண்பன் செந்தில் இதை பார்த்து மச்சி உன்னை மிச்செவியௌஸ்  லிஸ்ட்ல சேத்துர்காங்க டா கலக்கு அப்படி என்றான் . அப்படினா என்னடா என்றேன் . தெர்ல மச்சி எதாவது நல்லா படிக்கிற பசங்க லிஸ்டா இருக்கும் டா என்றான். எனக்கு மிகவம் பெருமையாக இருந்தது.

மிச்செவியௌஸ் என்றால் விஷமம் நிறைந்தவன் என்பதும் , என்னை விட பல மடங்கு விஷமம் செய்யும் ஜந்துகளை  அடுத்த பருவத்தில்  பார்க்கபோகிறேன் என்பதை அறியாமல்  , வாயில் விஷம் வைத்து அலையும் ஒரு காட்டு பண்ணி எனக்கு அறை தோழனாகவும் எமதர்மனாகவும் வருவான் என்பததையும் தெரியாமல் அதை விட முக்கியமாக வாழ்கையில் ஒரு மனிதன் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கு சிறந்து உதாரணமாய் ஒருவன் அந்த ஊர்லே இருக்கிறான் அவன் எங்கள் கல்லூரியில் சேர போகிறான் என வருந்தாமல்  மூன்றாம் பருவத்திற்கு காத்திருந்தேன் - நீங்களும் சற்று காத்திருங்கள் .

Sunday, March 4, 2012

காதல் பருகிய முதல் பருவம்

வாழ்கையின் இரண்டாம் ஜென்மம் கல்லூரியில் தொடங்கியது. கழிப்பறைக்கு வரிசையில் நிற்பதில் இருந்து , ஒரே குளியல் அறையில் நான்கு பேர் குளிப்பது வரை எல்லாம் புதுமையாக இருந்தது . கழிப்ரையில் எவனாவது காக்க வைத்தால் தண்ணிரை பிடித்து மேலிருந்து ஊற்றும் நவீன விஞ்சான முறையை அந்த வருடம் அறிமுகம் படுத்தீனார்கள் . நண்பன் ரவி மற்றொரு முறை பித்து பிடித்து ஓடி வந்தான். இந்த முறை காரணம் ஆனந்த் ஸ்டாலின் என்ற காட்டுமிராண்டி மாதிரி இருக்கும் நல்ல மனிதன் ( பின்னொரு நாளில் அந்த கல் நெஞ்சுக்குள்ளும் காதல் கதை இருப்பதை அறிந்து கொண்டோம் ). அவனுக்கு காட்டுமிராண்டி வேலை செய்வது ஒரு பொழுது போக்கு. உதாரணதிற்கு , நடந்து கொண்டே நடு சாலையில் சிறுநீர் கழிப்பான் , குளியலறையில் பலான சேட்டை அசாத்தியமாய் செய்வான் . இவ்வாறு ஆனந்த் சுகமாய் பிறந்த ஆடைகளோடு செய்யும் லீலை ஒன்றை நண்பன் ரவி நேராக பார்த்து பித்து பிடித்து ஓடி வந்தான். அவனை அன்றில் இருந்து ரவி மூஞ்சை வைத்து வர்ணிக்கமாடன் க்ஹோல்கொண்டான் என்று அவனக்கு பெயர் சூற்றினான். வலியவனிடம் பயம் இருந்தாலும் எளியவர்களை சூரதனமாய் ஓட விடுவான். அவனிடம் மாற்றி முழித்த பல பேர்களில் ஒருவன்தான் சிவா ராமன் . கல்லூரியில் ரெண்டு சிவராமன் இருந்ததால் , விடுதியில் போடும் மட்டமான பொங்கலையும் நான்கு தட்டு விரும்பி சாப்பிடுவதால் இவனுக்கு பொங்கல் சிவராமன் என செல்லமாக அழைக்கப்பட்டான் ( மற்றொரு சிவ ராமை நெய் கூ என கூபிட்டனர் ) . பொங்கல் சிவராமன் என்ற பெயர் கூட அவனுக்கு சரி தான் அனால் அவன் தங்கி இருந்த அரை என் ஒன்பதால் அவன் பட்ட பாடு இருக்கே அப்பப்பா . அவனுக்கு விடுதியில் தொலைபேசி அழைத்தால் போதும் ரவி குதுகலம் ஆகி விடுவான். ஒன்பது சிவராமன் போன்.. சிவராமன் ஒன்பது போன் , டேய் ஒன்பது போன் என ஆரம்பிக்க விடுதி முழுவதும் அவனக்கு கோர்ஸ் பாடுவார்கள். அழுது கொண்டே சிவராமன் தொலைபேசி எடுக்க ஓடுவான். ரவிஇடம் மாற்றிய மற்றொருவன் சத்யராஜ் பெயரில் போட்ட சத்யம் போல அவனிடம் சத்தியமாக எந்த உண்மையும் எதிர்பார்க்க முடியாது. ஊரில் இருபவர்களிடம் மொத்தமாக கடன் வாங்கினால் தெரிந்து விடும் என்று ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய் கடன் கேட்டு அந்த பணத்தில் வாழ்க்கை ஒட்டி வந்தான். நண்பன் ரவி இந்த விசயத்தை மோப்பம் பிடித்து அவனிடம் நண்பனாய் பழகியும் மிரட்டியும் வசூல் வேட்டை செய்து வந்தான். ரவி இவ்வாறு ஒரு குட்டி தாதா வாக வளர்ந்து வர ஆரம்பித்தான்.
கல்லூரியில் என்னதான் அழகிய திருமகள்கள் எப் பிரிவில் ( செக்சன் ) இருந்தாலும் , காதல் மன்னர்கள் சி பிரிவில் தான் இருந்தனர் . இதில் மூன்று முக்கயமான நபரை பார்க்கலாம். முதல் நபர் கெர்ஜி ,வளர்ந்து கெட்டவர் . சர்தார்ஜி மாதிரி பெயர் வைத்திருந்தாலும் சல்வாரில் தான் கண்ங்கள் இருக்கும் . அந்த அளவுக்கு பெண்களின் வருகை பதிவேடு எடுப்பதில் மும்முரமாய் இருப்பார். அவருக்கு பிடித்த அஞ்சு பெண்களை பார்த்து மூன்றை தேர்வு செய்து ஒன்றை காதலிக்கலாம் என்று பெரிய குறிகோளோடு வேலை தொடர்ந்தான். இரண்டமனவர் குள்ள நரி. எல்லோரும் தன் வயதுக்கு ஒத்த பெண்ணை பார்த்து கொண்டிருக்கும் பொது நண்பர் மட்டும் உயரத்திற்கு தகுந்த மாதிரி ஒரு பெண்ணை பார்த்தான் . ( நல்ல வேலை அந்த காதல் நிறைவேறவில்லை. உலகம் தாங்கி இருக்காது இன்று ) பெயரில் தான் மதன் இருந்ததே தவிர அவன் கல்லூரி வாழ்க்கை முடியும் வரை துணை இன்றி தனியாக திரிந்தான் ( அவன் சேர்கை அவனை அவ்வாறு சுற்ற வைத்து விட்டது என்று கூட சொல்லலாம் ) . இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு ஒருவன் இருந்தான்- லிவி . மன்மதலீலை படத்தில் வரும் கமலஹாசன் பாத்திரம் எனக் கூறலாம் . கன்னி பெண்களை கவர்ந்து இழுக்கும் ஆற்றலை பெற்றிருந்தான் . இவனது காதல் வலையில் ஒரு பெண் கிளியும் ( அந்த கிளியை நேரில் பார்த்தவர்கள் என்னை மன்னிக்கவும் ) சிக்கியது. இந்த காதல் பன்னாடைகளுக்கு மன்னிக்கவும் பறவைகளுக்கு ஜோடி புறாவாக வேலை பார்த்தது குள்ள நரி கூட்டம் . கல்லூரியின் ஆரம்ப காலம் இவ்வவாறு ஒவ்வொருவர் வாழ்கையிலும் சூடு பிடிக்க ஆரமபித்தது.
சரி கொஞ்சம் கிளு கிளுப்பான விஷயத்துக்கு வருவோம். தங்கும் விடுதியில் பத்தாம் என் அறையில் அன்று ஒரு விசேஷ கூட்டம் . கூட்டத்தின் தலைமை பொறுப்பு எனக்கு அளிக்க பட்டது . கூடத்தில் ரவி , சுப்பி , லிவி மற்றும் லிவியின் அறை தோழன் முத்து ஆகியோர் இருந்தனர் தூத்துக்குடி பேருந்தில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை புத்தகத்தை அன்று லிவி வாங்கியார்ந்தான். அரிய புத்தகம் படிப்பதில் துரிய ஆர்வம் காட்டுவதால் அன்று நான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். பொன்னியின் செல்வன் கதை படித்தவர்கள் கதையில் வரும் கதாபாத்திரங்களை கற்பனையால் உருவம் செய்து வைப்பர். அதே போல் நான் கதை வாசிக்க ஆரம்பித்ததும் அனைவரும் கனவுலோகாம் சென்றனர். ரவி ஒரு படி மேலே சென்று கதையின் நாயகனாவே உருவம் செய்து கொண்டான் . லிவி மட்டும் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தான். கதை ஆரம்பித்த சிறிது நேரத்தில் லிவி எழுந்து தூங்க சென்றான். அவன் நடவடிக்கையில் ஒரு பதட்டம் இருந்தது . நாங்கள் கதையின் மும்மரத்தில் விட்டு விட்டோம் . விடிய விடிய எங்கள் கதை சூடு பிடித்தது . எல்லோரும் அன்று மன நிறைவாக தூங்க சென்றனர் . நானும் நன்றாக தூங்கினேன். திடிரென பெட்டி உருட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். எட்டி பார்க்கையில் காலை மணி ஐந்து. இன் நேரத்தில் யாரடா என்று பார்த்தல் நண்பன் லிவி கையில் வேதாகமம் ( பைபிள் ) வைத்து படித்துகொண்டிருந்தான் . என் சந்தேகம் வலுக்கவே என்னடா லிவி என்றேன் . அவன் சொல்ல மறுத்து உளறினான் . நான் துருவவே " அது ஒன்னும் இல சிவா , நேத்து நீ சொன்ன கத அப்டி என் கனவுல வந்துச்சா அப்றோம் ...அப்றோம் ..அப்றோம் எனக்கும் வந்துடுச்சு " என்று சொன்னான் " அதான் காலையிலே குளிச்சிட்டு பைபிள் படிக்குறேனு சொன்னான் " யாரிடமும் சொல்லாதே என்று வேறு அப்பாவியாய் சொன்னான் . அந்த ஒரு வாக்கை அன்று முதல் இன்று வரை என் அருமை தோழர்கள் தவிர யாரிடமமும் சொல்லாமல் காத்து வருகிறேன்.

நாட்களும் வேகமாக நகர்ந்தன. பள்ளி பருவத்தில் நான் கணினி துறை எடுத்தால் எனக்கு கணினி நடைமுறை வகுப்பு ( ப்ராடிகல் கிளாஸ் ) மிகவும் பிடித்தது. ஜாவா சீ ஆகியவற்றை பள்ளியில் படித்து விட்டு வந்ததால் இங்கு பவர் பொயின்டும் , வோர்ட் டோகுமேண்டும் , சரளமாக இருந்தது. அதை விட கூதுகலம் அந்த வகுப்பில் நாம் கடலை போடுவது மிகவும் எளிதாக இருந்தது. முன்பு பார்த்த ரம்பா ஊர்வசி மேனகைகள் அந்த வகுப்பில் மட்டும் தாங்கள் தான் கணினி கண்டுபிடித்தவர்கள் போல் பேசுவார்கள். நான் முதலில் ஊர்வசி இருக்கும் இடத்திற்கு கடலை போடலாம் என சென்றேன். ஊர்வசி மாநிறமாய் இருந்தாலும் மாலை நேர வெயிலாய் ஜொலிப்பாள். அனால் அவளிடம் பேசுவதற்குள் கழுதை மேய்ப்பவன் அந்த இடத்திற்கு வந்து கழுதை மேய்க்க ஆரம்பித்து விடுவான் . அவனக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் அவளிடம் கடலை போடுவான் ( அவளுக்கு இவன் அரை குறை என்பது ஆறு மாதங்களில் தெரிந்தது ) . சரி நமக்கு தேறாது என மேனகை பக்கம் செல்லாம் என்றால் அவளோ சப்பாத்தி மாவை தான் விரும்பினால். எனது தோழன் கங்குலி அங்கே தான் உட்காந்திருப்பான் . ரெண்டு பேரும் சேர்ந்து சப்பாத்திக்கு மாவு பிசைவார்கள் . சரி நமக்கு வாய்த்தது நெய் உருண்டை தான் என்று ரம்பை இடம் சென்றேன். உயர்ந்த மனம் படைத்தவள் அவள் ( என் நண்பர்கள் பின்னாளில் என்னையும் அவளையும் சேர்த்து வைத்து பேசினாலும் , இன்று வரை என்னை நம்பியவள் .) அங்கே நின்றுகொண்டு கடலை போட காரணம் தேடினேன். அதற்குள் அவளே என்னை கூபிட்டு , " உனக்கு பவர் பாயிண்ட் புரியலையா , இங்கே வா நான் சொல்லித்தாரேன் , இது தான் சளைடு ஷோ " என்று நாசா விஞ்சானி போல் விவரித்தால். நானும் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி " ஓ எப்படி இந்த எழுத்தை பறக்கவிடுரீங்க , சான்சே இல்லீங்க " என்று வயலின் வாசிக்க ஆரம்பித்தேன் . ஆங்கில படத்தில் வரும் மிக பிரபலமான வார்த்தை " அண்ட் தட் இஸ் தி ஸ்டார்டிங் பாயிண்ட் ஒப் அன் எடேர்னல் பிரிஎண்ட்ஷிப் " ( அதுவே ஒரு சாசுவத நட்புக்கு தொடக்கமாக இருந்தது ) இந்த இடத்துக்கு பொருத்தமாய் அமைந்தது .
விடுதிகளை என்னும் சில காதபாத்திரங்களை அறிமுகபடுத்கிறேன். விடுதி கிழக்கு திசையை ரவி என்ற தாதா இருந்தான் என்றால் மேற்கு திசையில் ஒரு பண்ணி குட்டி தாதாவாக ஆசை பட்டது . பார்த்தல் விஜயகாந்தையே நகல் ( ஜெராக்ஸ் ) எடுத்தவன் மாதிரி இருப்பான் அவனுக்கு அவனே தவசி என்று பெயர் சூற்றிகொண்டான். அவன் கல்லூரி விடுதிக்கு எடுத்து வந்தது ஒரே ஒரு லுங்கி தான் போலும் அந்த லுங்கியையும் , சோப்பு வாங்கியதற்கு இனாமாய் கொடுத்த மேலாடை அணிந்தாலும் , சின்ன கௌண்டர் என்ற தன்னை தானே நினைத்து சோப்பு பார்க்காத துண்டை எபோழுதும் கம்புக்கூட்டில் வைத்திருப்பான். தாதாவின் துணைக்கு பலர் இருந்தாலும் கப்பி பசன்களாய் முக்கியமான இருவர் திரிந்தனர் . முதலாவான் ஹார்ட்வின். குருவி கூடை தலையில் எந்நேரமும் சுமந்து கொண்டு தான் நடப்பான். மைகேல் ஜாக்சன் என்று எவனோ ஒருவன் சொன்னதால் ஆடிகொண்டே தான் நடப்பான் ( பின்னொரு நாளில் எங்கள் கல்லூரியின் உண்மையான மைகேல் ஜாக்சன் புள்ளி கிருஷ்ணா என்பவன் சரித்ரம் படைத்தான் ) பெண்களிடம் உணர்சிவசமாய் பேசி கவர்ந்து வந்தான். இவனிடம் வாயை கட்டி வாங்கிகொள்பவன் ஒரு தடியன் இருந்தான் மலைமான் தலையும் டிகியையும் ஒரே மாதிரி வைத்திருக்கும் இவன் ஆள் தான் நன்றாக தடியங்காய் மாதிரி இருப்பான் அனால் அவன் பேச ஆரம்பித்தால் கற்பமாய் இருக்கும் பூனை குட்டி முனங்கிய மாதிரியே இருக்கும். இந்த கூத்து பட்டறையில் தான் சுண்ணாம்பு வாயன் மகேந்திரா , பெப்ப காளி, குட்டி பாப்பா சரண் மற்றும் மதன் இருந்தனர். இவர்கள் விடுதி சாப்பாட்டை காலி செய்யும் தான்மிக பொறுப்பை தாங்களாவே ஏற்றுகொண்டனர் .

அடுத்து வந்த சில மாதங்களில் பலான வேலைகள் பல நடந்தன. , எக்கு தப்பாய் திரிந்த எ பிரிவில் இருந்த எங்கள் மெக்கனிக்கல் குத்துவிளக்கை ஒருவன் அப்போதே திரி ஏற்றினான் . ஆட்டோ ஜோன்சன் வண்டியை தூத்துக்குடிக்கு ரூட் அடித்தான். ஸ்டாலின் முள்ளும் மலர்ந்தது, பீப்பாய்கள் இருக்கும் பீ பிரிவில் கஞ்சா கணேஷு கீதம் பாடினான் , அதே கீதம் பாட இதயவின் முயன்று தோற்றான், ஜெயந்தர்கள் காதல் ஜெயந்தி கொண்டாடினார்கள், சிறுக்கிகள் சீரும் சி பிரிவில் லிவி விகடகவியாய் விளங்கினான் , மண்ணு மதனோ இலியான இடுப்பு அளவே இருந்தும் ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை சாபிட்டன் , கர்ஜி காதல் வலி வீசி அவன் வாழ்க்கைக்கு அப்போதே ஆப்பு தேடிகொண்டான் , காதல் தீ எங்கே எரிந்தாலும் அணைக்கும் டி பிரிவில் பசு மாட்டை மேய்க்க பத்து பேர் முயன்றும் சோறே மாடு மேய்க்க தகுதி ஆனான். ஈ எறும்பு கூட அண்டாத ஈ பிரிவில் நண்பன் ரவி ஈ டி போர்டில் படம் வரையும் வித்தகன் ஆனான் , இசையை தேடி ஷேய்க் கால்கள் சென்றன ( அவன் கல்லூரியில் காதலிக்க ஆரமபித்த முதல் பெண் . பட்டியல் இருபது முதல் இருபத்தைந்து வரை நீளும் ) அதே போல் பொம்பளை ஷேய்க் ( பல ஆண்களை காதலித்தவள் ) நேரோலா நம் மலையமானை முதலில் தேர்ந்தெடுத்தாள் ( சீறி வரும் காளை, அஞ்சா நெஞ்சன் , காதல் மன்னன் , கட்டிளம் சிறுத்தை - இன்று வரை உயிர் எடுக்கும் நண்பன் பாலாஜி அவள் கண்ணில் என்னும் சிக்கவில்லை ). எப்பொழுதுமே எக்குதப்பாய் திரியும் எப் பிரிவில் முன்னே சொன்னது கழுதைகள் கல்லூரியில் அட்டகாசம் செய்தார்கள் ( போன வாரம் மக்கள் விரும்பிக் கேட்டும் தணிக்கையில் ( சென்சர் ) அது தாண்டாது என்பதால் பென்சில் மாட்டரை இதில் சேர்க்கவில்லை. மன்னிக்கவும் ) , பப்பியும் சப்பாத்தியும் பாரபட்சம் இன்றி பழகினார்கள். பூமிகா என்று சுமா பின்னல் உருண்டு உருண்டு தக்காளி சுப்பி , ரோலர் சுப்பியாய் மாறினான் . தருண் என்ற கிறுக்கன் தறுதலையாய் வணஜாவோடு திரிந்தான் . இவ்வாறு காதலும் அதை விட கள்ள காதலும் ஜொலிக்க காம தேவன் கூடுதல் வேலை ( ஓவர் டைம் ) செய்து கொண்டிருந்தது.
காதல் ஜோடிகளை பிரிக்கும் நேரம் வந்தது. ஆட்டம் போட்ட அனைவரும் தங்கள் துறை தேடி பிரிந்தனர் . ஆறுதல் செய்தியாய் அனைவரும் ஒரே தொகுதியில் ( பிளாக் ) அடுத்த ஆறு மாதங்கள் இருப்போம் என்பதே. அடுத்த ஆறுமாதங்கள ஷேய்க் அடவாடிகளில் இருந்து , ஒன்னே முக்கா வாங்கிய பல்ப் வரை இன்ப சுற்றுலா முதல் என்குயரி கமிட்டி வரை , ஜாவா பைக்கில் இருந்து ஒரே புல்லெட் டயலாக்கு வரை அரை இருபத்து எட்டில் என்னை தூரத்தியது முதல் நாலாம் என் அறையில் நாத்தியது வரை பற்றி பார்க்கலாம்.

Saturday, March 3, 2012

கல்லூரியின் முதல் நாள்

கோடி விந்துவில் போட்டி போட்டு வெற்றி பெற்ற பூரிப்பை விட அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தேன் . கல்லூரி வாழ்வின் முதல் நாள். மகிழ்சிக்கு முக்கிய காரணம் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கலித்து பெண்டிர் உடன் மீண்டும் வகுபறையை பகிர்ந்து கொள்ளும் திருநாள் என்பதால் அந்த மகிழ்ச்சி . பணிரெண்டாம் வகுப்பில் அருகில் உள்ள மாணவன் தயவால் ஆயிரத்து நூறு மதிப்பெண் எடுத்தும் , அரசின் கொள்ளைகார புத்தியினால் கண்டுபிடிகப்பட்ட நுழைவுத்தேர்வில் நுழைய கூட வலி இல்லாமல் மாட்டிகொண்டு , என் கனவை அம்பானியிடம் இருந்து பிலானிக்கும் பின் பிலானிடம் இருந்து ஆர் ஈ சி கும் கடைசியில் பெயர் அழவாது பொருந்தும் என் ஈ சி என்ற கல்லூரியில் நான் பேமென்ட் எனப்படும் லஞ்சத்தின் மூலமாக வாய்ப்பு பெற்றேன் . நான் சேர்ந்தது பத்தாது என்று பள்ளி வகுப்பு தோழர்கள் செந்தில் , ரமேஷ் இருவரையும் மூளை சலவு செய்து சேர சொன்னேன் . அவர்கள் கலி காலம் அவர்களும் ஏதோ கற்பனைகள்ஓடு சேர்ந்தார்கள் . செந்தில் மட்டும் விவரமாய் கணினி துறை தேர்ந்தெடுத்தான் .எங்கள் இருவருக்கும் அப்போது அவ்வளவு விவரம் பத்தவில்லை .

கல்லூரியை நான் தேர்ந்து எடுத்ததிற்கு முக்கியமான காரணம் , நான் இருபது ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் அருகில் இருப்பதாலும் தென் தமிழகத்தில் நாங்கள் தான் சிறந்த கல்லூரி என்ற பீத்திகொண்டதாலும் அல்ல. கல்லூரி இருந்த ஊரில் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்று என் நண்பன் ஒருவன் சொன்ன பொய் கூற்றை ஏற்று இக் கல்லூரியில் சேர வேண்டும் என்று அடம் பிடித்து சேர்ந்தேன்.
என் ஈ சி கல்லூரி என்னை ஈசி ஆக வரவேற்கவில்லை. முதல் நாள் கல்லூரியில் பெயர் பிரகாரம் வகுப்பு பிரிப்பார்கள் என்று சொன்னார்கள் . எனக்கு பள்ளி நாட்களில் ஒரு வசதி இருந்தது. என் பெயர் 'சி' வில் ஆரம்பிபதால் தனியாக சிந்திக்க வேண்டாம் , 'அ' வில் வரும் மாணவனை கேள்வி கேட்க தொடங்கும் பொது , என் ரெகார்ட் நோட்டிலும் , ஒதுக்கீட்டுக் கணக்கு ( அசின்மென்ட் ) பாகங்களில் 'ஆ' எழுத ஆரம்பித்தால் போதும் . எந்த சண்டாளன் இதற்கு சூனியம் வைத்தானோ தெரியவில்லை 'எப்' வகுப்பில் இரண்டாவது மாணவன் பெயர் ஆக எனது பெயர் இருந்தது. இனி நாம் தான் அனைவர்க்கும் முன் உதாரணமாய் இருக்க வேண்டும் என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் . செந்தில் 'ஈ 'ஆடிகொண்டிருகும் ஈ பிரிவிலும் ரமேஷ் டிகாசன் கலரில் அனைவரும் இருக்கும் 'டி' பிரிவுக்கும் சென்றான்.

தொன்று தொட்டு வளர்த்து வந்த கடைசி இருக்கையை தேடி என் கால்கள் சென்றன. என் கண்கள் அடுத்த ஆறு மாதங்களை குளிரூட்ட காத்திருபவர்களை தேடி சொல்லாமல் சென்றது. ஆப்பில், மா , பலா என்று அத்தனை கனிகளும் கடைசியில் இருப்பவர்களுக்கே என்று கடவுள் கொடுத்த வரமாய் எல்லோரும் என் வகுப்பில் இருந்தார்கள் . கண்கள் குளிருந்து கொண்டிருக்க ஒரு பெருத்த உருவம் என்னை மறைத்தது. " ஹை ஆய் எம் ஸ்வர்ணா" என்றது அவ் உருவம் . என் பதிலை எதிர்பார்க்கும் முன் என் அருகில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தது ( அன்று ஆரம்பித்த பேச்சு நான்கு ஆண்டுகள் நிற்கவே இல்லை ) . ச்வர்ணவிடம் ஒரு விசேஷம் உண்டு. எவன் பக்கத்தில் இருக்கிறான் என்று பாக்கமாடன். மொக்கை பொட ஆரம்பித்தால் அருகில் இருப்பன் அப்பாடா என ஓடிவிடுவார்கள் . அந்த நிலைமை எனக்கு முதல் நாளே வந்தது. சரி வெளியே செல்லலாம் என்று முடிவெடுத்தேன் . ஈ வகுப்பு பிரிவினர் கும்பலாக வெளிய நின்றுகொண்டிருந்தனர் . எல்லோரும் மாக்கானை தெரிந்தார்கள் ( என்னை மாதிரியே ).
கல்லூரியை சுற்றி காண்பிக்க சில பெருசுகள் வந்தன. தாஜ் மகாலை கூட அவ்ளோ பெருமையாய் எவனும் சொல்லி இருக்க மாட்டான். ஓர் ஆயுரம் முறை "வி ஆர் தி பெஸ்ட் இன் சவுத் தமிழ்நாடு நெக்ஸ்ட் டு மேப்கோ " என்று கூவி கொண்டே வந்தார்கள். செம மொக்க டா சாமி என நினைக்கும் பொது அருகில் வந்தது அதே உருவம். "ஹை மீ சுப்பிரமணி மெக்கானிகல் , இப்போ நாம என்ன பன்னபோறோம் " என்று அருகில் வந்தான். என்னடா இது சற்று முன்பு தான் வந்து வேற ஒரு பெயர் சொன்னான் , அதுக்குள்ள இவன் பெயர மறந்த்துட்டனா என கேள்வி எழுந்தது. சட்று உற்று நோக்கிய பின் முன்னால் பார்த்த உருவம் உருளை உடம்பும் தக்காளி தலையும் கொண்டிருந்தான் , இவனுக்கு தக்காளி உடம்பும் உருளை தலையும் இருந்தது. அனால் வாய் மட்டும் இருவருக்கும் காது வரை இருந்தது . சரி தான் என்று திரும்பிய போது , கல்லூரியை சுற்றி காண்பிக்க வந்த பெருசுகளிடம் ஒருவன் கேள்வி கேட்டு கொண்டிருந்தான். வாழக்காய் பஜ்ஜி அரவேக்காடாய் எடுத்தவன் போல் இருந்தான். இப்போவே இவன் இவ்ளோ கேட்கிறானே இவன் நம்மை என்ன பாடு படுத்த போறனோ என்று பப்ப்சை வாயிற் மொக்கிகொன்று கிளம்பியது அந்த பெருசு. அடுத்ததாக சில அபூர்வ மனிதர்களையும் சந்தித்தேன். விளக்கமார் குச்சிக்கு சட்டை போட்ட சுதாகர் , பார்த்தாலே பலம் என தெரியும் கே சுப்பிரமணி , வாயால் வடை சுடும் வசந்த் , வேலு , மற்றும் சிலரை முதல் நாள் சந்தித்தேன் . அடுத்த நான்கு வருடங்கள் மெக்கானிகல் எடுத்ததால், நான் இங்கே என் மெக்கானிகல் நண்பர்களை பற்றி எழுதியதோடு என் அருமை தோழிகள் பற்றியும் சிறுது எழுதுகிறேன். ரம்பா, ஊர்வசி , மேனகய் என என் வகுப்பிலும் மூன்று தோழிகள் இருந்தார்கள் . யாரை பார்ப்பது , யாரை விடுவது என ஒரு போராட்டமே ஓடியது என் மனதில். போராட்டத்தின் தீர்வாய் சரி நாளுக்கு ஒருமுறை மூன்றாக பிரித்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். சுமா, உதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்று தோழிகளும் அங்கே இருந்தார்கள். அவர்களை போல் எமகாதிகள் ஊரில் யாரும் இல்லை என்று பின் ஒரு நாளில் நண்பன் ஒருவன் சொன்னான். பார்பதற்கு மட்டும் கிராமத்து மங்கையராய் குனிந்த தலை நிமிராமல் இருந்தனர்.
என்னும் சில காதபாதிரத்தை நான் பிறகு அறிமுகம் செய்கிறேன். இப்பொழுது கல்லூரி தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர் . எட்டில் சனி என்று ஜோசியன் சொன்னது போலவே இருந்தது . உள்ளே ஒருவன் இருந்தான். அவன் என் அழகில் பாதி இருந்தான். அனால் குள்ளநரி வேலையில் என்னை விட இரண்டு மடங்கு செய்திருந்தான் . முந்தைய நாள் இரவே வந்து மட்டமான கட்டில் மூன்றில் சுமாரான கட்டிலை அவனுக்கு அவன் நண்பனுக்ம் முன் வசதி செய்து விட்டான் . இரும்பா தகரமா என்று தெரியாத கட்டிலை எனக்கு கொடுத்து நண்பா இது உனக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ என்றான் . அதாவது பரவாவில்லை, அங்கே பொருள் வைக்க நான்கு தட்டுகள் இருந்தன. அதில் மூன்றை அவர்கள் எடுத்து , நான்காவதையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராக எனக்கு ஒரு ஓரம் கொடுத்தார்கள். அதில் என் பொருளை வைபதற்கு நான் தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் செல்ல வேண்டும். அவன் நண்பனும் அவனும் ஒரே ஊரில் படிதவர்கலம் . பள்ளி நாட்களில் இருந்தே அவனை எமத்ருவது எனக்கு ஒரு ஹாபி என்று பெருமை அடித்தான். சுப்பி என்று அவனை அறிமுகம் செய்தான் சரி டா கப்பி என்று எல்லாம் ஏன் தலை விதி என அவனுடன் கை குலிக்கு கொன்டு வெளியே வந்தேன்.
விடுதி நட்பு விடாது கருப்பு என்பார்கள் . அதே போல் விடுதியில் நான் சந்தித்த சிவா , பழனி , அமித் , முத்து , சௌரப் ,ஷ்யாம் , நீண்ட கால நண்பர்கள் பின்னாளில் ஆனார்கள் . இந்த ஷ்யாம் சண்டாளன் பற்றி நான் சொல்ல வேண்டும் . அவனை முதல் முதல் சந்தித்த போதே ஒரு பெரும் கூடம் போட்டிருந்தான். ஆளை பார்பதற்கு தமிழ் நாடகங்களில் வரும் குண்டு ஆர்த்திக்கு பேன்ட் சட்டை போட்ட மாதிரி இருந்தான். "இனொரு அப்பளம் தர்மாட்டேன்க்ரால் , தயிர் தட்லே கொடுக்க மாட்டேன்க்ரால் " என கூட்டம் கூடிக்கொண்டு விடுதி காப்பாளர் களிடம் சண்டை போட்டு கொண்டிருந்தான் . அவனை பார்த்ததும் எனக்கு தமிழ் நாடகங்களில் வரும் குண்டு ஆர்த்திக்கு சட்டை பேன்ட் போட்ட மாதிரி இருந்தான். ரவி " இவனை பார்த்த இந்த காலேஜுக்கு என்னொரு அப்பளம் சாப்பிட தான் வந்துர்கானோ நு தோணுது டா " என்று கடிந்தான் . சரி சாப்பிடலாம் என சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பினோம் . அந்த நான்காம் என் அறையை கடக்கும் போது மட்டும் செம கப்பு அடித்தது. அதற்கான கரணம் அப்போது விளங்கவில்லை .
விடுதியில் பகடி வதை ( ராக்கிங் ) இருப்பாதால் ரவி அன்று உச்சா கூட செல்லவில்லை. கழிப்பறை வரை சென்று அங்கே ஒரு கருங் கொரங்கு நிற்பதாகவும் அதனால் இன்று எச்சை துப்பி சமாளித்து கொல்வதாகவும் முடிவெடுத்து விட்டான் . நான் பகடி வதை எப்படி இருக்கும் என பார்க்க ஆர்வம் தூண்டியது . வீரனாக அங்கு சென்று வீண் வம்பை விலைக்கு வாங்கினேன் . சுமார் ஒரு மணி நேரம் நன்றாக பிழிந்தார்கள் . என்னை காப்பாத்த எந்த இழிச்சவயனாவது வரமாட்டான என பார்த்தபோது , காலை நான் பார்த்த லொட லொட பய்யன் வந்தான். அவன் வந்ததும் என்னை விட்டுவிட்டார்கள் . அவன் பெயர் விக்ரம் . பின்னர் தான் தெரிந்தது அம்பலவாணர் ஒரு வாரத்துக்கு முன்னரே வந்து இங்கே அடி வாங்கி கொண்டிருக்கிறான் என்று. அன்று என்னை காப்பதியவன் தான் இன்று வரை எந்த பிரச்சனை வந்தாலும் பலி அவன் மேல் போட்டு சுலபமாய் தப்பிக்க வழி செய்யும் ஒரு அறிவுள்ள ஆர்வக் கோளாறு எனக்கு கிடைத்தான் என்று . அறைக்கு வந்து தகர கட்டிலில் தலை சாய்த்தேன். என்னும் என் வாழ்வில் சந்திக்காத சில மனிதர்களால் ( ஷேக் , சுளை , மதன் , தம்பு , பாலாஜி , தவசி , ரெங்கா , டோனி , முகெர்ஜி , அன்பு , கோழி , லிவி , ராம் , ஜுடு , சீனி .....) நான் அன்று நிதானம் ஆக தூங்க முடிந்தது .