Saturday, March 30, 2013

நாலும் தெரியாத நான்காவது பருவம்

மக்களே  ஒரு வருஷம் கழிச்சு இந்த பக்கத்த  திருப்பி எழுதுறேன் . காலேஜ் பாசம் திடிருன்னு வந்துடுச்சு . போன  வருஷம்  எழுதுனதுல சில  பேரு பீல் பண்ணாங்க . நண்பர்களே  இது பீல் பண்ற டைம் இல்ல , நினைச்சு  பாது சிரிக்க  வேண்டிய டைம். சோ என்சோய் !! நல்லா  இருப்போம் நல்லா  இருப்போம் , எல்லாரும் நல்லா  இருப்போம் 

அப்படியாக நான் காலேஜ் நாலாவது பருவத்துக்கு வந்துட்டேன் . ஹாஸ்டல் சாப்பாடு  இல்லாம நல்லா வெயிட் போட ஆரம்பிச்சுட்டேன் . ரூம்ல சாப்பிடுறதுக்கு கம்பெனி எப்பவுமே இருக்கும். நம்ம ராஜேஷ் ஆளு தான் நோஞ்சான் மாதிரி இருப்பானே தவிர பார்வதி ஹோட்டெல புல் மீல்ஸ் ரெண்டு அடிப்பான் , இவனாலே அந்த ஹோட்டல்ல மதிய சாப்பாடு விலை ஏத்திட்டாங்க. நம்ம ஷேக் அண்ணன்ன கேட்கவே வேண்டாம் , "எ ஒன்" ஹோட்டெல பத்து ஹால்ப் பாயில் சாபிடுவான் , கேட்டா போன முட்டை லைட்டா உடைஞ்சிருச்சுநு சாக்கு வேற சொல்லுவான். இவங்களோட போனா நாம சாபிட்றது கம்மி தாணு தோணும் . அதனால இவங்களோட போய் நல்ல சாப்பிடுவேன் . பட் ஆனா இந்து தோம்பு பயலோட போனா மட்டும் ஒரு சின்ன சிக்கல் . அவனுக்கு எங்க போனாலும் சாவனிர் வேணும்னு அந்த ஹோட்டெல இருக்கிற உப்பு பாட்டில் , சாஸ் டப்பா , மெளகு டப்பா எல்லாத்தையும் லுங்கில மடிச்சு எடுத்து வந்திடுவான் .வீட்ல ரெண்டு செல்ப் புல்லா இவன் ஆட்டைய போட்ட ஐட்டம் தான் இருக்கும். நம்ம ரமேஷ் ரொம்ப டீசெண்ட் . வீட்ல  சமைக்றேனு இருக்குற  எல்லா  பொருளையும் காலி பண்ணிடுவான் . சாப்பாடும்  படு சுமாரா தான் இருக்கும்  ( நம்ம  அதையும் ஒரு கட்டு கட்டுவோம்ல )

இந்த கோஷ்டியோட  சேர்ந்து ஒரு பீம் பாயா நானும் சந்தோஷமா  டெவெலொப்  ஆயிட்டுஇருந்தேன் . ஆனா என் உயிரை எடுக்குறதுக்கு ஒருத்தன்  இருந்தான். எங்க ரூம்க்கு கெஸ்ட்ன்னு  ஒருத்தன்  வருவான் . நானும் நண்பேன் டா,  பாசக்கார பயபுள்ள என்ன ஒட்டுனாலும்  விட்டுட்டு இருக்க மாட்டான்போலன்னு நினச்சேன் , ஆனா கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரிஞ்சுது கப்பி பய பக்கத்துக்கு வீட்டு ஆன்டிய கரெக்ட் பண்ண தான் எங்க வீட்டுக்கு வந்து இவ்ளோ இவ்ளோ கஷ்டபட்டான்னு.  பேசிகிட்டே இருப்பான் . நம்ம பசங்க அவனுக்கு  புகைச்சல்னு  பெயர் வச்சாங்க . அந்த கப்பி பண்ண கேப்மாரிதனத்த நம்ம கொஞ்சம் கழிச்சு பாக்கலாம். 

நம்ம கிளாஸ்ல நடந்த கொஞ்ச கூத்த  பாப்போம் . 4த் செமஸ்டர் ஒரு மொக்க செமஸ்டர். அதுக்கு ஏத்த மாதரியே ரெண்டு மொக்க  ஸ்டாப்ஸ் வந்தாங்க . முதல் ஆளு நம்ம குருமி. அவரோட உண்மையான பேரு மறந்து போய்டுச்சு . அவரு குருமினு  ஒரு ஆத்தரோட  புக்ல இருக்குற ஒவ்வொரு வார்த்தையும் படிச்சி படிச்சி காமிப்பான். சொந்தமா நம்மாளுக்கு யோசிக்க தெரியாது. கடுபடிச்ச கன்றாவியாவே சுத்துவான் .அதனாலே  அவன் எவனுயும் நம்ப மாட்டான்.  
இவன் பாடம் எடுக்கிறது  நம்ம ரோலர் சுப்பிரமணிக்கு  தாலாட்டு  பாடுற மாதிரி இருக்கும் . நைட் மூர்த்தி தெய்டர்ல பார்த்த  படத்த நினச்சே  தூங்கிடும் . நானும் ரவியும் அவன மாட்டிவிட  பிளான் பண்ணுவோம் . குருமிய உத்து  பாத்துகிட்டே  இருப்போம் . குருமி எங்கல  பாத்ததும் நாங்க ரெண்டு பெரும்  சுப்பிரமணிய பாக்க ஆரம்பிச்சிடுவோம். குருமி ஏன் நாங்க அவன பாக்கிறோம்னு  எட்டி  பாத்து காண்டுஆய்டுவான்.  சுப்பி  அன்னைக்கு   சப்பி  ஆயுடுவான். அப்பறோம் கொஞ்சம் நேரம் மொக்கைய போகும் .இப்படி  போன  போதுதான் ரவி ஒரு நாள் செம ஐடியா கொடுத்தான் . நம்ம ஏன் கவித எழுத குடாதுன்னு .நம்மளுக்கு பிகர  பாத்து தான் கவிதை எழுத கொடுத்து வைக்கலை , நம்ம  பீக்கடை பத்தி ஏன்  எழுத கூடாதுன்னு முடிவு பண்ணினோம் . அப்படி எழுதுன கொஞ்சம் கவிதை தான் இது " சுண்ணாம்பு  வாயா  ஏலுற  எஸ்தர பாத்தா  மோல்ர" ( ஏலுற -கேந்திரன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) ) . "கூட்டம்ணா கூடு எங்க ஐட்டம் ஜூடு". " கருப்பா இருக்கும் தார் ரோடு அத விட கருப்பு நம்ம கருவாடு " ( கருவாடு - சுரேஷ்  ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) )  இப்படி கிளாஸ்ல இருக்குற ஒருவருக்கும்  ஒரு பஞ்ச்  எழுதி வச்சோம் . ( கல்வெட்டில்  பொறிக்க  வேண்டிய சித்திரங்கள்  இவை . நாங்க  அதை தனியா  ஒரு புத்தக தொகுப்பு  வைரமுத்துவ  வச்சி வெளியிடுறேன்  )

சரி கடைசி மேட்டர் நம்ம குறுமிய ஓட விட்ட கதைய பாப்போம் . செமஸ்டர்  முடிஞ்சா நம்ம வாதிஸ் எல்லாம்  நம்ம மேல கொஞ்சம் பாசமா இருப்பாங்க . ரீசன் என்னனா அது பீட் பாக் (feedback )  டைம் . நம்ம குருமி எங்கள எல்லாம் கொடும படுத்தினதுக்கு பலி வாங்குற டைம் . இந்த ஷேய்க் பய  நம்ம மாமா  எல்லோரும் அவன  ஜென்ம விரோதியா பாத்தாங்க . பீட் பாக்  பக்கத்துல .. 1 எச்செல்லேன்ட்  2.வெரி குட்  3. குட்  4 ஓகே   அப்டின்னு  இருக்கும் . நம்ம பய புள்ளைங்க 5 பூர் ....10 வெரி பூவர் ......20 வெரி வெரி  பூவர் .....25 வெரி வெரி வெரி வெரி பூவர்  அப்டின்னு எழுதி  கொடுதுடானுங்க  . குருமிக்கு  உறுமி  அடிச்சிடானுங்க . 

என்னும் சில  விஷயங்கள் நாலாம் பருவத்துல நடந்துருக்கலாம் . காலம் வேகமா  ஓடுறதுல  பாதி விஷயம் மறந்துடுது . அதுக்காகதான் இந்த.  மாதிரி  எதயாவது கிறுக்கி  வைக்கலாமானு  முடிவு பண்ணினேன் . மக்களே நீங்களும் ஏதாவது  கிறுக்கி வைங்க . வி நெவெர் க்நொவ் . நாளைக்கு  உங்க பேரன் என்னத்த  கிளிச்சனு கேட்டான , வி நீட் ஹிஸ்டரி . வரலாறு மிக முக்கியம் மக்களே !!



2 comments:

Mathan Karthik said...
This comment has been removed by the author.
Mathan Karthik said...

அற்புதம் !!! என்ன வார்த்தைகள் !!! "சுப்பி அன்னைக்கு சப்பி ஆயுடுவான் " "குருமிக்கு உறுமி அடிச்சிடானுங்க". உனக்குள்ள ஒரு T.R இருக்காருடா Siva !!!